Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாகன சோதனை: ரூ.20 லட்சம் குட்கா பறிமுதல்

நவம்பர் 16, 2019 04:25

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே வாகன சோதனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அழிஞ்சிவாக்கம் அருகே வாகன சோதனையின்போது இரண்டு சரக்கு வாகனங்களை போலீசார் சோதனையிட்டதில் அவற்றில் குட்கா, ஹான்ஸ், மாவா உள்ளிட்டவை பண்டல் பண்டலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

போலீசார் ஒரு வாகனத்தை சோதனையிட்டு கொண்டிருந்தபோது இன்னொரு வாகனத்தில் இருந்த இருவர் தப்பியோடினர். சரக்கு வாகனங்களில் இருந்த இரண்டு டன் எடையுள்ள 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அசோக்குமார், சுரேஷ் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்